Thursday, November 30, 2017

ஸ்ரீ கணேச பஞ்சரத்னம் .. தமிழ் ஆங்கில பொழிப்புரை

விக்ன விநாயகனின் திருவடிகள் சரணம்

श्री महागणेश पञ्चरत्नं . ஸ்ரீ கணேச பஞ்சரத்னம் . Sri Ganesa Pancharatnam

(1)

मुदा करात्त मोदकं सदा विमुक्ति साधकं
कलाधरावतंसकं विलासि लोक रक्षकम् 
अनायकैक नायकं विनाशितेभ दैत्यकं
नताशुभाशु नाशकं नमामि तं विनायकम् 

முதா கராத்த மோதகம் ஸதா விமுக்தி ஸாதகம் 
கலாதராவதம்ஸகம் விலஸி லோக ரக்ஷகம்
அநாயகைக நாயகம் விநாசிதேப தைத்யகம்
நதாசுபாசு நாசகம் நமாமி தம் விநாயகம்

Mudakaratha Modakam Sada Vimukthi Sadhakam
Kaladaravathamskam Vilasi Loka Rakshakam
Anaayakaik Nayakam Vinashithebha Dhyathakam
Nathashubhashu Nashakam Namami Tham Vinayakam 

மோதகத்தை மகிழ்ச்சியோடு கரத்தி லேந்தும் நாதனே!
முக்தியினை பக்தருக்கு அருளும் டுண்டி ராஜனே!
பிறைமதியை முடியில் சூடிக் காட்சி தரும் காந்தனே!
போற்றித் துதிக்கும் அடியவரைக் காத்தருளும் வேந்தனே!
தன்னையாளும் தலைவனில்லா தலைவனேவி நாயகா!
தாரணியைக் காக்கவென்று தானவனைக் கொன்றவா!
பக்தர்களின் பாவங்களை நாசம் செய்யும் நாயகா!
பணிந்து உன்னை வணங்குகின்றேன் காப்பாய்வி நாயகா!

I prostrate before Lord Vinaayaka who joyously holds modaka in His hand, who bestows salvation, who wears the moon as a crown in His head, who is the sole leader of those who lose themselves in the world. 
The Leader of the leaderless who destroyed the elephant demon called Gajaasura and who quickly destroys the sins of those who bow down to Him, I worship such a Lord Ganesh.

(2)

नतेतराति भीकरं नवोदितार्क भास्वरं
नमत् सुरारि निर्जरं नताधिकापदुद्धरम्
सुरेश्वरं निधीश्वरं गजेश्वरं गणेश्वरं
महेश्वरं तमाश्रये परात्परं निरन्तरम् 

நதேதராதி பீகரம் நவோதிதார்க்க பாஸ்வரம்
நமத்ஸ¤ராரி நிர்ஜரம் நதாதிகா பதுத்தரம் 
¤ரேச்வரம் நிதீச்வரம் கஜேச்வரம் கணேச்வரம் 
மஹேச்வரம் ஸமாச்ரயே பராத்பரம் நிரந்தரம் 

Nathetharathi Bheekaram Namodhitharka Bhaswaram
Namthsurari Nirjaram Nathadikaa Paduddaram
Sureswaram Nidhishwaram Gajeswaram Ganeswaram
Maheshwaram Thvamashraye Parathparam Nirantharam

உன்னை வணங்கித் தொடங்கி விட்டால் விக்னம் தீர்த்து அருளுவாய்!
உதய காலக் கதிரவன் போல் ஒளி மிகுந்து விளங்குவாய்!
தேவர்களைக் காத்திடவே அசுரர்களைச் சிட்சிப்பாய்!
ஆபத்துகள் எதுவந்தாலும் அடியவரை இரட்சிப்பாய்!
உம்பருக்கு அரசனே நவநிதிக்கும் நாதனே!
யானைகளின் ராஜனே கணங்களுக்குத் தலைவனே!
தேவருக்கு தேவனாகி மஹா தேவன் ஆனவா!
தெண்டனிட்டு வணங்குகின்றேன் காப்பாய்வி நாயகா!

I meditate eternally on Him, the Lord of the Ganas, who is frightening to those not devoted, who shines like the morning sun, to whom all the Gods and demons bow, who removes the great distress of His devotees and who is the Best among the best.

(3)

समस्त लोक शंकरं निरास्त दैत्य कुन्जरं
दरेतरोदरं वरं वरेभवक्त्रं अक्षरम् 
कृपाकरं क्षमाकरं मुदाकरं यशस्करं
मनस्करं नमस्कृतां नमस्करोमि भास्वरम् 

ஸமஸ்த லோக சங்கரம் நிரஸ்த தைத்ய குஞ்சரம் 
தரேதரோதரம் வரம் வரேபவக்த்ரமக்ஷரம்
க்ருபாகரம் க்ஷமாகரம் முதாகரம் யசஸ்கரம்
மநஸ்கரம் நமஸ்க்ருதாம் நமஸ்கரோமி பாஸ்வரம் 

Samastha Loka Shankaram Nirastha Dhaithya Kunjaram
Daretharodaram Varam VareBhavakthra Maksharam
Krupakaram Kshamakaram Mudhakaram Yashaskaram
Manaskaram Namskrutham Namskaromi Bhaswaram

அகிலமெல்லாம் சுகம்பெறவே வரமளிக்கும் கணபதி!
அசுரயானை கஜாசுரனைக் கொன்றழித்த கணபதி!
பானை வயிற்றில் புவனமெல்லாம் பொத்திக் காக்கும் கணபதி!
யானை முகத்து ஐங்கரனே அழிவில்லாத கணபதி!
பிள்ளைகளின் பிழைகள் தம்மை மன்னித்தருளும் கணபதி!
பிழைகள் தம்மைப் பொறுத்து நல்ல வழியில் செலுத்தும் கணபதி!
பக்தருக்கு மகிழ்ச்சி, கீர்த்தி, மேன்மை நல்கும் கணபதி!
பணிந்து உன்னை வணங்குகின்றேன் காத்திடுவாய் கணபதி!

I bow down with my whole mind to the shining Ganapati who brings happiness to all the worlds, who destroyed the demon Gajasura, who has a big belly, beautiful elephant face, who is immortal, who gives mercy, forgiveness and happiness to those who bow to Him and who bestows fame and a well disposed mind.

(4)

अकिंचनार्ति मर्जनं चिरन्तनोक्ति भाजनं
पुरारिपूर्वनन्दनं सुरारि गर्व चर्वणम् 
प्रपञ्चनाश भीषणं धनंजयादि भूषणं
कपोलदानवारणं भजे पुराणवारणम् 

அகிஞ்சநார்த்தி மார்ஜநம் சிரந்தநோக்தி பாஜநம் 
புராரிபூர்வ நந்தநம் ¤ராரி கர்வ சர்வணம்
ப்ரபஞ்சநாச பீஷணம் தநஞ்சயாதி பூஷணம்
கபோலதாநவாரணம் பஜே புராண வாரணம்

Akinchanarthi Marjanam Chiranthanokthi Bhajanam
PurariPurva Nandanam Surari Gurva Charvanam
Prapanchanasha Bheeshanam Dhananjayadi Bhooshanam
KapolaDanavaranam Bhaje Purana Varanam

ஏழை பங்காளனாகி காக்கும் ஏக தந்தனே!
அநாதியான வேதங்களும் வணங்கும் வக்ர துண்டனே!
திரிபுரத்தை ஒரு சிரிப்பால் எரித்த ஈசன் மைந்தனே!
தானவரின் கர்வந் தன்னை ஒடுக்கும் ஐந்து கரத்தனே!
காலனையும் கலங்கச் செய்யும் காலனே கஜானனே!
விஜயன் போன்ற வீரர்களும் பணியும் விகட ராஜனே!
முதற் பொருளாய்த் தோன்றி உலகை வழி நடத்தும் ஜேஷ்டனே!
மாசில்லாத அன்பினாலே வணங்குகின்றோம் நேசனே!

I worship the ancient elephant God who destroys the pains of the poor, who is the abode of Aum, who is the first son of Lord Shiva (Shiva who is the destroyer of triple cities), who destroys the pride of the enemies of the Gods, who is frightening to look at during the time of world’s destruction, who is fierce like an elephant in rut and who wears Dhananjaya and other serpents as His ornaments.

(5)

नितान्त कान्त दन्तकान्तिमन्तकान्तकात्मजं
अचिन्त्यरूपमन्तहीनमन्तराय कृन्तनम् 
हृदन्तरे निरन्तरं वसन्तमेव योगिनां
तमेकदन्तमेकमेव चिन्तयामि सन्ततम् 

நிதாந்த காந்த தந்தகாந்தம் அந்தகாந்தகாத்மஜம்
அசிந்த்யரூப மந்தஹீந மந்தராய க்ருந்தநம் 
ஹ்ருதந்தரே நிரந்தரம் வஸந்தமேவ யோகிநாம் 
தமேகதந்தமேவதம் விசிந்தயாமி ஸந்ததம்

Nithantha Kantha Dhantha Khanthi Mantha Kantha Kathmajam
Achinthya Roopa Manthaheena Mantharaya Krunthanam
Hrudanthare Nirantharam Vasanthameva Yoginam
Thamekadantha Mevatham Vichintha Yami Santhatham

வெண்மையான தந்தம் மின்னத் திகழும் விக்ன ராஜனே!
இடது காலால் காலன் தன்னை உதைத்த சிவனின் பாலனே!
கற்பனைக்கும் எட்டாத வடிவம் கொண்ட கஜமுகா!
துக்கம் தீர்த்து விக்னங்களைக் களைந்து விடும் ஹேரம்பா!
தவ முனிவர் தேவர் மூவர் யாவருடைய மனதிலும்
நிரந்தரமாய் நிலைத்திருக்கும் நிகரில்லாத நாயகா!
ஒற்றைத் தந்தத்தோடு திகழும் ஒப்பில்லாத உன்னையே
ஒரு மனதாய் உள்ளத்திலே சிந்திக்கின்றேன் உண்மையே!

I constantly reflect upon that single tusked God only, whose lustrous tusk is very beautiful, who is the son of Lord Shiva, (Shiva, the God of destruction), whose form is immortal and unknowable, who tears asunder all obstacles, and who dwells forever in the hearts of the Yogis.

.. फल श्रुती ..  .. Phala Shruti ..

महागणेश पञ्चरत्नं आदरेण योन्ऽवहं
प्रजल्पति प्रभातके हृदि स्मरन्ं गणेश्वरम् 
अरोगतां अदोषतां सुसाहितीं सुपुत्रतां
समाहितायुरष्ट भूतिमभ्युपैति सोऽचिरत् 

மஹாகணேச பஞ்சரத்ந மாதரேண யோந்வஹம்
ப்ரஜல்பதி ப்ரபாதகே ஹ்ருதிஸ்மரந் கணேச்வரம் 
அரோகதாமதோஷதாம் ¤ஸாஹிதீம் ¤புத்ரதாம்
ஸமாஹிதாயுரஷ்ட பூதிமப்யுபைதி ஸோசிராத்

Maha Ganesha Pancharathna Madarena Yonvaham
Prjalpathi Prabhathake Hrudismaram Ganeswaram
Arogathaam Dhoshathaam Susahitheem Suputhratham
Samahithaayurashta Bhoothimabhupaithi Soochiraath

காலையிலே எழுந்ததுமே கணபதியை நெஞ்சிலே
கருத்துடனே நினைத்தபடி சிரத்தையுடன் வணங்கியே
மஹாகணேச பஞ்சரத்னம் என்னும் இந்த நூலையே
மந்திரமாய் மனதில் வைத்து ஜெபித்து வரும் போதிலே
பிணிகளெல்லாம் நொடியினிலே விட்டு விலகி ஓடுமே!
பிறவிப்பிணி என்னும் பெரிய பிணியும் தீர்ந்து போகுமே!
ஆனைமுகன் அருளினாலே கல்வி செல்வம் கவித்துவம்
ஆரோக்யம் ஆயுள் என்று நன்மை அனைத்தும் சேருமே!

He who recites this every morning with devotion, these five gems about Lord Ganapati and who remembers in his heart the great Ganesha, will soon be endowed with a healthy life free of blemishes, will attain learning, noble sons, a long life that is calm and pleasant and will be endowed with spiritual and material prosperity.


इति श्री शंकराचार्य विरचितं श्री महागणेश पञ्चरत्नं संपूर्णम्
இத்துடன் ஸ்ரீ ஷங்கராச்சார்யா இயற்றிய ஸ்ரீ மஹாகணேச பஞ்சரத்னம் முடிவடைகிறது.

..........
தோத்திரப்பாக்கள் அர்த்தம் அறிந்து ஜெபிக்கப்பட வேண்டியவை
தத் ஜெப; ததார்த்த பாவனம்அர்த்தம் அறிந்து தியானிக்கப்பட வேண்டியவை.

வலைப்பூ பதிவுகள் படித்த விஷயங்களை நான் அறிந்தவைகளோடு அங்கொன்றும், இங்கொன்றுமாக சேர்த்து இங்கு ஒழுங்குபடுத்தி ஏற்றியுள்ளேன்.
வலைப்பூ பதிவர்களுக்கு மிக்க நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ் பொழிப்புரை வலைப்பதிவர்கவிநயாஅவர்களுடையது.
.........

Friday, November 24, 2017

॥ श्री स्कन्द षट्कम् ॥ .. ஸ்ரீ ஸ்கந்த ஷட்க ஸ்தோத்ரம்




இதைப் படித்தால் இல்லத்தில் பொன் பொருள் சேரும். அன்னப் பஞ்சம் இருக்காது. எல்லா மங்கள காரியங்களும் தடை நீங்கிச் சிறப்பாக நடக்கும். ஞானமும், ஆரோக்கியமும், புத்ர லாபமும் உண்டாகும்.

श्री गणेशाय नमः   ஓம் ஸ்ரீ கணேஶாய நமஹ:

(1)
षण्मुखं पार्वतीपुत्रं क्रौञ्चशैलविमर्दनम्
देवसेनापतिं देवं स्कन्दं वन्दे शिवात्मजम्  

ஷண்முகம் பார்வதீபுத்ரம் க்ரௌஞ்சஶைல விமர்தநம்
தேவஸேநாபதிம் தேவம் ஸ்கந்தம் வந்தே ஶிவாத்மஜம்  

ஆறுமுகனும், பார்வதியின் புத்ரனும், மலை உருவமெடுத்த க்ரௌஞ்சாஸூரனை வதைத்தவனும், தேவஸேனையின் கணவனும், தேவனும், சிவபுத்ரனுமான ஸ்ரீ ஸ்கந்தனின் திருவடிகளில் என் தலை தாழ்த்தி வணங்குகிறேன், திருப்பாதங்களில் சரணமடைகிறேன்.

(2)
तारकासुर हन्तारं मयूरासन संस्थितम्
शक्तिपाणिं देवेशं स्कन्दं वन्दे शिवात्मजम्  

தாரகாஸுர ஹந்தாரம் மயூராஸந ஸம்ஸ்திதம்
ஶக்திபாணிம் தேவேஶம் ஸ்கந்தம் வந்தே ஶிவாத்மஜம்  

தாரகாஸூரனை வதம் செய்தவனும், மயில் மீது அமர்ந்தவனும், ஞான வேலை கையில் தரித்தவனும், சிவபுத்ரனுமான ஸ்ரீ ஸ்கந்தனின் திருவடிகளில் என் தலை தாழ்த்தி வணங்குகிறேன், திருப்பாதங்களில் சரணமடைகிறேன்.

(3)
विश्वेश्वरप्रियं देवं विश्वेश्वरतनूद्भवम्
कामुकं कामदं कान्तं स्कन्दं वन्दे शिवात्मजम्  

விஶ்வேஶ்வர ப்ரியம் தேவம் விஶ்வேஶ்வர தநூத்பவம்
காமுகம் காமதம் காந்தம் ஸ்கந்தம் வந்தே ஶிவாத்மஜம்  

எல்லா உலகிற்கும் ஈசனான ஸ்ரீ பரமேஸ்வரனின் அன்பிற்கு உரியவனும், தேவனும், ஸ்ரீ விச்வேஸ்வரனின் புத்ரனும், வள்ளி தேவசேனையிடத்தில் காமம் கொண்டவனும், பக்தர்களுக்கு அபீஷ்டங்களை அளிப்பவனும், மனதைக் கவருகின்றவனும் சிவபுத்ரனுமான ஸ்ரீ ஸ்கந்தனின் திருவடிகளில் என் தலை தாழ்த்தி வணங்குகிறேன், திருப்பாதங்களில் சரணமடைகிறேன்.

(4)
कुमारं मुनिशार्दूलमानसानन्द गोचरम्
वल्लीकान्तं जगद्योनिं स्कन्दं वन्दे शिवात्मजम्  

குமாரம் முநிஶார்தூலமாநஸாநந்த கோசரம்
வல்லீகாந்தம் ஜகத்யோநிம் ஸ்கந்தம் வந்தே ஶிவாத்மஜம்  

குமரக் கடவுளும், சிறந்த முனிவர்களின் மனதில் ஆனந்த வடிவமாய்த் தோன்றுகிறவனும், வள்ளியின் கணவனும், உலகங்களுக்கு காரணமானவனும், சிவபுத்ரனுமான ஸ்ரீ ஸ்கந்தனின் திருவடிகளில் என் தலை தாழ்த்தி வணங்குகிறேன், திருப்பாதங்களில் சரணமடைகிறேன்

(5)
प्रलयस्थितिकर्तारं आदिकर्तारमीश्वरम्
भक्तप्रियं मदोन्मत्तं स्कन्दं वन्दे शिवात्मजम्  

ப்ரலயஸ்திதிகர்தாரம் ஆதிகர்தாரமீஶ்வரம்
பக்தப்ரியம் மதோந்மத்தம் ஸ்கந்தம் வந்தே ஶிவாத்மஜம்  

ப்ரளயம் ரக்ஷணம் இவற்றைச் செய்கிறவரும், முதலில் உலகங்களைப் படைத்தவரும், யாவருக்கும் தலைவனும், பக்தர்களிடத்தில் அன்பு கொண்டவனும், ஆனந்தத்தால் மதம் கொண்டவனும், சிவபுத்ரனுமான ஸ்ரீ ஸ்கந்தனின் திருவடிகளில் என் தலை தாழ்த்தி வணங்குகிறேன், திருப்பாதங்களில் சரணமடைகிறேன்.

(6)
विशाखं सर्वभूतानां स्वामिनं कृत्तिकासुतम्
सदाबलं जटाधारं स्कन्दं वन्दे शिवात्मजम्  

விஶாகம் ஸர்வபூதாநாம் ஸ்வாமிநம் க்ருத்திகாஸுதம்
ஸதாபலம் ஜடாதாரம் ஸ்கந்தம் வந்தே ஶிவாத்மஜம்  

விசாக நக்ஷத்திரத்தில் பிறந்தவனும், உலகிலுள்ள யாவருக்கும் தெய்வமும், கிருத்திகையின் புத்ரனும், எப்பொழுதும் குழந்தை வடிவமாய் விளங்குகிறவனும், ஜடையை தரித்தவனுமான, சிவபுத்ரனுமான ஸ்ரீ ஸ்கந்தனின் திருவடிகளில் என் தலை தாழ்த்தி வணங்குகிறேன், திருப்பாதங்களில் சரணமடைகிறேன்.

(7)
स्कन्दषट्कं स्तोत्रमिदं यः पठेत् शृणुयान्नरः
वाञ्छितान् लभते सद्यश्चान्ते स्कन्दपुरं व्रजेत्  

ஸ்கந்த ஷட்கம் ஸ்தோத்ரமிதம் : படேத் ஶ்ருʼணுயாந்நர:
வாஞ்சிதாந் லபதே ஸத்யஶ்சாந்தே ஸ்கந்தபுரம் வ்ரஜேத்  

ஆறு சுலோகமுள்ள இந்த ஸ்ரீ ஸ்கந்தனின் ஸ்தோத்திரத்தை பாராயணம் செய்பவர்கள், அவர்கள் கோரிய பொருளை உடன் அடைவார்கள். முடிவில் ஸ்ரீ ஸ்கந்தனின் பட்டினத்தில் அவனுடன் சேர்ந்து வசிப்பார்கள்.

इति श्री स्कन्द षट्कं सम्पूर्णम्   இதி ஶ்ரீ ஸ்கந்த ஷட்கம் ஸம்பூர்ணம்

.....
வலைப்பூ பதிவுகள் படித்த விஷயங்களை அங்கொன்றும், இங்கொன்றுமாக சேர்த்து இங்கு ஒழுங்குபடுத்தி ஏற்றியுள்ளேன்.
பதிவர்களுக்கு மிக்க நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
.....