செல்வம் தரும் சிவ பெயர்ச்சி
சனிப்பெயர்ச்சி, குரு பெயர்ச்சி, ராகு-கேது பெயர்ச்சி கேள்விபட்டிருப்பீர்கள்.
சிவ பெயர்ச்சி கேள்வி பட்டுள்ளீர்களா..?
சிவன் ஆலகால விஷத்தை உண்டு ருத்ர தாண்டவம் ஆடியபோது பிரளயம் உண்டாகியது. ருத்ர மூர்த்தியாக சிவன் கோபம் கொண்டு ஆடியதை கண்ட பார்வதி மனமுருகி ஸ்வாமியை வேண்டி கோபத்தை குறைத்து சாந்த ஸ்வரூபனாக
ஸ்ரீ பரமேஸ்வரன் சகல உயிர்களையும் காக்க வேண்டும் என வேண்டினாள்.
ஸ்ரீ பரமேஸ்வரன் அம்பாளின் வேண்டுதலை ஏற்று கோபமான ருத்ர ரூபத்திலிருந்து சாத்வீகமான சதாசிவ ரூபத்திற்கு மாறிய தினமே “சிவப்பெயர்ச்சி”.
ஒவ்வொரு வருடமும் தை மாதம் கடைசி திங்கட்கிழமை நாளில் வருவதே இந்த சிவப்பெயர்ச்சி. இந்த சிவப்பெயர்ச்சி தினத்தில் பகவானின் அருள் என்பது மிகப்பெரிய தடைகளை விலக்கும்.
இன்றைய கலியுகத்தில் பலவித மன அழுத்தத்தால் மனித குலம் அதீத கோபத்திற்கு ஆளாகிறது. அப்படிபட்ட கோபத்தை அழித்து சாந்தம் அன்பு கருணை குணம் மாறக்கூடிய தினமே சிவப்பெயர்ச்சி.
ஏழரை சனி, அஷ்டமசனி, ஜென்ம குரு, ராகு-கேது தீவினைகள் என எல்லாவித கிரஹ தோஷங்களையும் விலக்கும் ஒரே தினம் தை மாதத்தில் வரும் கடைசி திங்கட்கிழமையே.
அனைத்து ராசியினரும் சிவப்பெயர்ச்சி அன்று - தை மாதத்தில் வரும் கடைசி திங்கட் கிழமையன்று - அருகில் உள்ள சிவாலயங்களுக்கு சென்று சிவபெருமானுக்கு சந்தன அபிஷேகம் செய்யுங்கள். சிவபெருமானை சந்தனத்தால் அபிஷேகம் செய்தால் கடன், நோய் விலகும். சொல்வாக்கு செல்வாக்கு திரும்ப கிடைக்கும். மனம் அமைதி பெறும். கோபம் குறையும். வீட்டில் அமைதி தங்கும்.
சிவப்பெயர்ச்சிக்கான விஷேச ஸ்தலம் …
மயிலாடுதுறை அருகில் உள்ள முட்டம் குளத்தங்கரை கிராமத்தில் உள்ள “ஸ்ரீமஹாபலீஸ்வரர்” சிவன் கோவிலே சிவப்பெயர்ச்சிக்கான விஷேச ஸ்தலம் ஆகும்.
இது மஹாபலி சக்கரவர்த்தி தான் இழந்த செல்வம், புகழ், சொல்வாக்கு என அனைத்தையும் மீட்டெடுத்த தலமாகும்.
பல ஆயிரம் வருட பழமையான சிதிலமடைந்த சிவஸ்தலம்.
வீடற்று, மொழியற்று, ஆதியாய் ஆனாதியாய்,
கேட்பாரட்று சப்தமாய் நிசப்தமாய்
எதற்கும் எந்த ஒரு வரைமுறை கொண்டும்
வர்ணிக்க இயலாதவனாய் இருப்பவன் சிவனே.
ஒவ்வொரு செயலிலும் அதற்கான மூலமும்,
ஒவ்வொரு நிகழ்விலும் அதற்கான மூலமும் ,
இன்பமும் துன்பமும், அழகும் அறிவும்,
தெளிவும் ஞானமும், ஞானத்தின் சூட்சமும்,
விதியும் விதியின் மூலமும்,
மதியும் மதியின் மூலமும்,
சுவையும் சுவையின் மூலமும்,
பார்க்கும் கேட்கும் தொடும்
எல்லாவற்றிக்கும் மூலமாய் இருப்பவனும்,
பார்க்க இயலாத, தொட இயலாத,
தன்மை முழுமையும் உணர இயலாத,
சூட்சுமத்தையும் அதன் மூலமாய் இருப்பவனும்,
இப்படி எதற்கும் ஒரு மூலமாய் இருந்துகொண்டு இருப்பவனே சிவன் !
வலைத்தளம்/வலைப்பூ பதிவுகள் படித்து அறிந்த விஷயங்களை நான் அறிந்தவைகளோடு அங்கொன்றும், இங்கொன்றுமாக சேர்த்து இங்கு ஒழுங்குபடுத்தி ஏற்றியுள்ளேன்.
பதிவர்களுக்கு மிக்க நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
படங்கள் உதவி: வலைத்தளம்/வலைப்பூ பதிவுகள்


