Tuesday, September 8, 2015

சுவாமிநாத பஞ்சகம்


ஸுப்ரஹ்மண்ய ஸ்வாமினே நமஹ:

ஓம் என்ற பிரணவப் பொருளை பரமேஸ்வரனுக்கு விளக்கிக் கூறிய ஞானபண்டிதனான ஸ்கந்தப் பெருமான் சுவாமிமலை என்னும் திவ்ய ஸ்தலத்தில் குன்றின் மீது கோவில் கொண்டு அருள் புரிகிறார். பிரபவ முதல் அக்ஷய வருஷம் வரை உள்ள பிரம்ம புத்ராள் 60 பேர்களும் 60 படிகளாக தங்களை அமைத்துக் கொண்டிருக்கிறார்கள். படி ஏறும் பக்தர்கள் ஒவ்வொரு படியிலும் தேங்காய் உடைத்து, கற்பூரம் ஏற்றி வணங்கி விட்டு படி ஏறுவார்கள். அல்லது முதல் படியிலும் கடைசி படியிலுமாவது இப்படி செய்துவிட்டுச் செல்வார்கள்.

குன்றின்மீது ஸ்வாமிநாதன் என்ற பெயர் கொண்டு அருள் செய்யும் சுவாமிநாதனைக் குறித்து செய்யப்படும் இந்த ஸ்ரீ சுவாமிநாத பஞ்சகத்தை தினசரி பாராயணம் செய்வோர்க்கு சர்வ மங்களங்களையும் அளிக்க அவன் காத்திருக்கிறான்.

(நந்தவனத்தோர் ஓர் ஆண்டி என்ற மெட்டு)

ஹேஸ்வாமி நாதார்த்த பந்தோ - பஸ்ம
லிப்தாங்க காங்கேய காருண்ய ஸிந்தோ - (ஹேஸ்வாமி)

ருத்ராக்ஷ தாரிஜ் நமஸ்தே - ரௌத்ர
ரோகம், ஹரத்வம் புராரேர்குரோர்மே
ராகேந்து வக்த்ரம் பவந்தம் - மார
ரூபம் குமாரம் பஜே காமபூரம் - (ஹேஸ்வாமி)

மாம்பாகி ரோகாதகோராத் - மங்க
ளாம்பாக பாதேன, பங்காத் ஸ்வராணம்
காலாச்ச துஷ்பாக கூலாத் - கால
காலாஸ்ய ஸூனும் பஜேக்ராந்தஸானும் - (ஹேஸ்வாமி)

ப்ரம்மாதயே யஸ்யசிஷ்யா - ப்ரம்ஹ
புத்ரா: கிரௌ யஸ்ய ஸோபான பூதா:
ஸைன்யம் ஸுராச்சாபி ஸர்வே - ஸாம
வேதாதி கேயம் பஜே கார்த்திகேயம் - (ஹேஸ்வாமி)

காஷாய ஸம்வீத காத்ரம் - காம
ரோகாதி ஸம்ஹாரி பிக்ஷõன்ன பாத்ரம்
காருண்ய சம்பூர்ண நேத்ரம் - சக்தி
ஹஸ்தம் பவித்ரம் பஜேசம்பு புத்ரம் - (ஹேஸ்வாமி)

ஸ்ரீ ஸ்வாமி சைலே வஸந்தம் - ஸாது
ஸங்கஸ்ய ரோகான் ஸதா ஸம்ஹரந்தம்
ஓங்கார தத்வம் வதந்தம் - சம்பு
கர்ணே ஹஸந்தம் பஜேஹம் சி சுந்தம் - (ஹேஸ்வாமி)

ஸ்தோத்ரம் க்ருதம் சித்ரம் - தீக்ஷ?
தானந்த நாமணே ஸர்வார்த்தஸித்யை
பக்த்யா படேத்ய: ப்ரபாதே தேவ
தேவப் ரஸயாதாத் லபேதாஷ்ட ஸித்திம் - (ஹேஸ்வாமி)


இவை அனைத்தும் வலைத்தளம் / வலைப்பூ பதிவுகள் படித்து திரட்டிய தகவல். வலைப்பதிவர் தகவல்களுக்கு மிக்க நன்றி. படித்ததில் பிடித்ததை பகிர்ந்துகொள்கிறேன்.

No comments:

Post a Comment