Saturday, June 29, 2013

பைரவ ஸ்தோத்ரம் .. भैरव स्तोत्र



भैरव सर्वफलप्रद स्तोत्र

ॐ भं भैरवाय अनिष्ट निवारणाय स्वाहा ।
मम सर्वेग्रहाः अनिष्ट निवारणाय स्वाहा ।
ज्ञानं देहि, धनं देहि मम द्रारिद्रयं दुखं निवारणाय स्वाहा ।
सुतं देहि यशं देहि मम गृह क्लेशं निवारणाय स्वाहा
स्वास्थ्य देहि बलं देहि मम् शत्रु निवारणाय स्वाहा
सिद्धं देहि जयं देहि मम् सर्वेॠण निवारणाय स्वाहा
ॐ भं भैरवाय अनिष्ट निवारणाय स्वाहा

பைரவ ஸர்வப²லப்ரத³ ஸ்தோத்ரம்

ஓம் பம் பைரவாய அனிஷ்ட நிவாரணாய ஸ்வாஹா |
மம ஸர்வேக்³ரஹா​: அனிஷ்ட நிவாரணாய ஸ்வாஹா |
ஜ்ஞானம் தே³ஹி, தனம் தே³ஹி மம த்³ராரித்³ரயம் து³க²ம் நிவாரணாய ஸ்வாஹா |
ஸுதம் தே³ஹி யஸ²ம் தே³ஹி மம க்³ருஹ க்லேஷ²ம் நிவாரணாய ஸ்வாஹா
ஸ்வாஸ்த்²ய தே³ஹி ப³லம் தே³ஹி மம ஸ²த்ரு நிவாரணாய ஸ்வாஹா
ஸித்³தம் தே³ஹி ஜயம் தே³ஹி மம் ஸர்வேரூ'ண​: நிவாரணாய ஸ்வாஹா
ஓம் பம் பைரவாய அனிஷ்ட நிவாரணாய ஸ்வாஹா





ஸ்வர்ணாகர்ஷண பைரவ அஷ்டகம் ...

இந்த ஸ்வர்ணாகர்ஷண பைரவ அஷ்டகம் தனச் செழிப்பைத் தருவது.
வெள்ளிக்கிழமை, திங்கட்கிழமை இரண்டு நாட்களிலும், சந்தியா காலங்களில் படிப்பவர்கள் வாழ்க்கையில் வெற்றியையும், தன விருத்தியையும் அடைவார்கள்.
 பௌர்ணமியன்று இரவு எட்டு மணிக்கு தீபத்தை ஏற்றி வைத்துக் கொண்டு பதினெட்டு தடவை பாராயணம் செய்ய வேண்டும். இவ்விதம் ஒன்பது பௌர்ணமி பாராயணம் செய்தால் கண்டிப்பாக தன லாபத்தை அடைவார்கள்.
நீண்ட நாட்களாக பிடித்துக் கொண்ட வறுமையிலிருந்து விடுபடுவார்கள். ஒன்பதாவது பௌர்ணமியன்று அவலில் பாயசம் செய்து நிவேதிக்கலாம். வசதிக்கும், வாய்ப்புக்கும் ஏற்ப நிவேதனப் பொருளைக் கூட்டிக் கொள்ளலாம்.
அளவற்ற கீர்த்தியையும் தனத்தையும் தரும் இந்த பௌர்ணமி பூஜையை விடாமல் செய்பவர்களுக்கு சந்தோஷம் நிரந்தரமாக இருக்கும்.

தனந்தரும் வயிரவன் தளிரடி பணிந்திடின்
தளர்வுகள் தீர்ந்துவிடும்
மனந் திறந் தவன்பதம் மலரிட்டு வாழ்த்திடின்
மகிழ்வுகள் வந்து விடும்
சினந்தவிர்த் தன்னையின் சின்மயப்புன்னகை
சிந்தையில் ஏற்றவனே
தனக்கிலை யீடு யாருமே என்பான்
தனமழை பெய்திடுவான்

வாழ்வினில் வளந்தர வையகம் நடந்தான்
வாரியே வழங்கிடுவான்
தாழ்வுகள் தீர்ந்திட தளர்வுகள் மறைந்திட
தானென வந்திடுவான்
காழ்ப்புகள் தீர்த்தான் கானகம் நின்றான்
காவலாய் வந்திடுவான்
தனக்கிலை யீடு யாருமே என்பான்
தனமழை பெய்திடுவான்

முழு நில வதனில் முறையொடு பூஜைகள்
முடித்திட அருளிடுவான்
உழுதவன் விதைப்பான் உடைமைகள் காப்பன்
உயர்வுறச் செய்திடுவான்
முழுமலர்த் தாமரை மாலையை ஜெபித்து
முடியினில் சூடிடுவான்
தனக்கிலை யீடு யாருமே என்பான்
தனமழை பெய்திடுவான்

நான்மறை ஒதுவார் நடுவினில் இருப்பான்
நான்முகன் நானென்பான்
தேனினில் பழத்தைச் சேர்த்தவன் ருசிப்பான்
தேவைகள் நிறைத்திடுவான்
வான்மழை எனவே வளங்களைப் பொழிவான்
வாழ்த்திட வாழ்த்திடுவான்
தனக்கிலை யீடு யாருமே என்பான்
தனமழை பெய்திடுவான்

பூதங்கள் யாவும் தனக்குள்ளே வைப்பான்
பூரணன் நான் என்பான்
நாதங்கள் ஒலிக்கும் நால்வகை மணிகளை
நாணினில் பூட்டிடுவான்
காதங்கள் கடந்து கட்டிடும் மாயம்
யாவையும் போக்கிடுவான்
தனக்கிலை யீடு யாருமே என்பான்
தனமழை பெய்திடுவான்

பொழில்களில் மணப்பான் பூசைகள் ஏற்பான்
பொன் குடம் ஏந்திடுவான்
கழல்களில் தண்டை கைகளில் மணியணி
கனகனாய் இருந்திடுவான்
நிழல் தரும் கற்பகம் நினைத்திட பொழிந்திடும்
நின்மலன் நானென்பான்
தனக்கிலை யீடு யாருமே என்பான்
தனமழை பெய்திடுவான்

சதுர்முகன் ஆணவத் தலையினைக் கொய்தான்
சத்தொடு சித்தானான்
புதரினில் பாம்பைத் தலையினில் வைத்தான்
புண்ணியம் செய்யென்றான்
பதரினைக் குவித்து செம்பினை எரித்தான்
பசும்பொன் இதுவென்றான்
தனக்கிலை யீடு யாருமே என்பான்
தனமழை பெய்திடுவான்

ஜெய ஜெய வடுக நாதனே சரணம்
வந்தருள் செய்திடுவாய்
ஜெய ஜெய க்ஷேத்திர பாலனே சரணம்
ஜெயங்களைத் தந்திடுவாய்
ஜெய ஜெய வயிரவா செகம் புகழ் தேவா
செல்வங்கள் தந்திடுவாய்
தனக்கிலை யீடு யாருமே என்பான்
தனமழை பெய்திடுவான்

...

பரமனை மதித்திடா பங்கய ஆசனன்
ஒருதலை கிள்ளியே ஒழிந்த வானவர்
குருதியும் அகந்தையும் கொண்டு தண்டமுன்
புரிதரு வடுகனைப் போற்றி தெய்வமாகும்.




காலபைரவம் பஜேஹமனிஷம் காஷீபுரவாஸம் பூதேஷ

ஷூல சக்ர பாஷ தண்ட ஹஸ்தம் ஷோகமோஹவாரணப்ரஷஸ்தம்

நாரதாதினுத ஷ்யாமகாத்ரம் நாகயஜ்ஞஸூத்ரம் விசித்ரம்
க்ரூரதர பாபதண்டனசதுரம் குருகுஹ ப்ரியகரம் திகம்பரம்
வாரிஜாஸனாஸ்ய க்ருந்தனம் வாஞ்சிதார்தபலதான சிந்தனம்
தீரதரம் விதிகபாலதரணம் தேவராஜஸேவிதாப்ஜசரணம்

...

பெண்கள் சொல்லவேண்டிய காயத்ரி,

யோ தேவஸ் ஸவிதாஸ்மாஹம் தியோதர்மாதி கோசராஹா!
ப்ரேரயேத் தஸ்ய பர்கஸ் தத்வரேண்ய முபாஸ்மஹே!!




பைரவ அஷ்டகம் ...

த்ரினேத்ரம் வரதம் சாந்தம் குமாரஞ்ச திகம் பரம்,
பாசம் வஜ்ரம் ததாகட்கம் பானபாத்ரஞ்ச தாரிணம்,
இந்திராணி சக்திஸஹிதம் கஜவாஹன ஸூஸ்திகம்,
கபால பைரவம் வந்தே பத்ம ராகப்ரபம் சுபம்.

...

ஸ்ரீ பைரவ த்யானம் ...

ரக்த ஜுவால ஜடாதரம் சசிதரம்
ரக்தாங்க தேஜோமயம்
ஹஸ்தே சூலகபால பாச டமரும்
லோகஸ்ய ரக்ஷா கரம்
நிர்வாணம் ஸுநவாகனம்
திரிநயனஞ்ச அனந்த கோலாகலம்
வந்தே பூத பிசாச நாதவடுகம்
ஷேத்ரஷ்ய பாலம்சிவம் .

...

பைரவ காயத்ரி ...

ஒம் ஷ்வானத் வஜாய வித்மஹே !
சூல ஹஸ்தாய தீமஹி !
தன்னோ பைரவ : ப்ரசோதயாத் !!
ஓம் சூல ஹஸ்தாய வித்மஹே
ஸ்வாந வாஹாய தீமஹி
தந்நோ பைரவ: ப்ரசோதயாத்
ஓம் திகம்பராய வித்மஹே
தீர்கதிஷணாய தீமஹி
தந்நோ பைரவ: ப்ரசோதயாத்


இவை அனைத்தும் வலைத்தளம் / வலைப்பூ பதிவுகள் படித்து திரட்டிய தகவல்.
வலைப்பதிவர் தகவல்களுக்கு மிக்க நன்றி..
படித்ததில் பிடித்ததை பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

2 comments:

  1. அய்யா வணக்கம்,

    பதிவுகள் அருமை.உங்கள் பணி தொடரவேண்டும்.

    நன்றி

    சசி.இராஜசேகர்,

    ReplyDelete