Wednesday, June 26, 2013

சித்தர் காப்பு ...

 
"சித்தர் காப்பு"

"முக்தி கொண்டமோட்சமது மவுன தீட்சை
முனையறிந்து செல்லுதற்கு வாலை காப்பு ;
வெத்தி கொண்ட நந்தீசர் பாதங்காப்பு ;
வேதாந்தம் மூவாயிரம் திருமூலர் பாதங்காப்பு ;
அட்ட மா சித்திக்கும் அகத்தியன் பாதங்காப்பு ;
அன்பே உருவாக்கும் அகப்பேய் பாதங்காப்பு ;
பரம கயிலாய குரு போகர் பாதங்காப்பு ;
கொடுஞ் சீற்றம் மாறிட கொங்கணவர் பாதங்காப்பு;
சூழி முனை சூட்சும குரு சுந்தரானந்தர் பாதங்காப்பு ;
இகத்தில் கிரகம் வென்ற இடைக்காடர் பாதங்காப்பு ;
வரும் வாழ்நாள் சிறந்திட வான்மீகர் பாதங்காப்பு ;
மாயத்தை நீக்கிட மச்சமுனிவர் பாதங்காப்பு ;
முன் கர்மம் நீக்கி ஞானம் காட்டும் முனி
கமலர் பாதங்காப்பு ;
காரியம் உணர்ந்து வெல்ல கருவூரார் பாதங்காப்பு ;
பாவங்கள் நீங்கிட யோகம் தந்த பதஞ்சலி பாதங்காப்பு ;
மனப்பாம்பை அடக்கிட பாம்பாட்டி பாதங்காப்பு ;
தன்னுடல் சிறக்க செடி தந்த தன்வந்திரி பாதங்காப்பு ;
காலம் அறிந்து வாழ ஞானம் தரும் காசிபர் பாதங்காப்பு ;
வெட்ட வெளியை உணர்த்திட்ட கடுவெளி சித்தர் பாதங்காப்பு ;
கொல் குணம் போக்கும் கோரக்கர் பாதங்காப்பு ;
பரத்தை அறிந்திட ஞானம் போதித்த புலஸ்தியர் பாதங்காப்பு ;
தேரா மருத்துவம் தெரிந்து உரைத்திட்ட தேரையர் பாதங்காப்பு ;
வான் உலகில் மனு வாழ சிவவாக்கியர் பாதங்காப்பு;
போகத்தை துறந்திட புகழ்ஞானம்தந்த புண்ணாக்கீசர் பாதங்காப்பு;
நல்ஞானஜோதியை நலமாய் உரைத்திட்ட நற்குதம்பை பாதங்காப்பு;
அறியாமை இருள் நீக்கிய அமலன் அழுகுண்ணி பாதங்காப்பு;
பூஜா ஞானம் புகன்றிட்ட புலிப்பாணி பாதங்காப்பு;
காலம் கடந்து வாழ கலை கூறிய காகபுஜண்டர் பாதங்காப்பு;
கர்மம் நீக்கி காலனை வென்றிட காலங்கி பாதங்காப்பு;

காப்பான கருவூரார், போகநாதர், கருணையுள்ள அகத்தீசர்,
சட்டைநாதர், மூப்பான கொங்கணரும், பிரம்மசித்தர்,
முக்கியமாய் மச்சமுனி , நந்திதேவர், கோப்பான கோரக்கர்,
பதஞ்சலியார், கூர்மையுள்ள இடைக்காடர், சண்டிகேசர்,
வாப்பான வாதத்திற்கு ஆதியான வாசமுனி கமலமுனி
காப்புதானே".


இவை அனைத்தும் வலைத்தளம் / வலைப்பூ பதிவுகள் படித்து திரட்டிய தகவல். வலைப்பதிவர் தகவல்களுக்கு மிக்க நன்றி..

No comments:

Post a Comment