Monday, September 17, 2012

படித்ததில் பிடித்தது ...

நவக்கிரகதோஷத்தைப்போக்கிடும் மதுரகாளி .....

திருச்சி அருகிலிருக்கும் திருவாச்சூர் மதுரகாளி கேட்ட வரமெல்லாம் தருபவள். அவளின் அருட்பார்வையால் சென்னை மக்களும் சுகமாக வாழ்ந்து வருகின்றனர். ஆம்! அவளே சென்னை கூடம்பாக்கத்தில் எழுந்தருளிவருகிறாள். அவளைப் பின்வரும் மந்திரம் சொல்லி அல்லது ஜபித்து வழிபட நவக்கிரக தோஷங்கள் விலகிவிடும்.

ஓம் ஜ்வால கேசாம் த்விநேத்ராம் சசிகலதராம்
கர்ண தாடங்க பூஷாம்
தப்தஸ்வர்ண நிபாம் கரண்ட மகுடாம்
பாசம் வரம்ச பிப்ரதீம் டக்காம் அபயம்ச
சந்ததீம் ஸகல பயகராம் சவுபாக்யதாம்
பாக்யதாம் த்யாயேகம் மதுராம்பிகாம் பவானீம்
சுபத்ம நிலயாம் ஸ்ரீகாளிகாம்கன்யாம்.

ஐங்கார ஸ்ருஷ்டி ரூபாய
ஹ்ரீங்கார ப்ரதி பாலிகா
க்லீம் காளி கால ருபிண்யை
பீஜ ரூப நமோஸ்துதே!

சாமுண்டா சண்ட ரூபாயை
யைங்காரி வரதாயிணி
விச்வேத்வம் பயதா நித்யம்
நமஸ்தே மந்த்ர ரூபிணி!


ஆதிசக்தே ஜகன்மாதா பக்தானுக்ரஹ காரிணி
ஸர்வத்ர வ்யாபிகேநந்தே ஸ்ரீ ஸந்த்யே தே நமோஸ்துதே
த்வமேவ ஸந்த்யா காயத்ரீ ஸாவித்ரீ ச சரஸ்வதி
ப்ரஹ்மாணீ வைஷ்ணவீ ரௌத்ரீ ரக்தஸ்வேதா ஸிதேதரா

... காயத்ரீ ஸ்தோத்திரம்

பொதுப் பொருள்:
ஆதிசக்தியே, உலகமனைத்திற்கும் தாயே நமஸ்காரம். பக்தர்களைக் காத்து அவர்களுக்கு நற்பலன்களை அருளும் அன்னையே, எங்கும் நிறைந்திருப்பவளே, நமஸ்காரம்.
முடிவு காண இயலாத ஸந்தியா தேவியே, நமஸ்காரம்.
காயத்ரி தேவியே, உன்னை விஷ்ணுவின் சக்தியான ஸந்தியாவாகவும், ஈசனின் சக்தியான ஸாவித்ரியாகவும், பிரம்மாவின் சக்தியான ஸரஸ்வதியாகவும், ரக்தச்வேதை என்ற தேவதையாகவும், ஸிதேதரையாகவும் நான் காணுமாறு பிரகாசிக்கும் ஜகன்மாதாவே நமஸ்காரம்.

இத்துதியை பாராயணம் செய்தால் தேவியின் திருவருளால் அறிவு பிரகாசிக்கும்; சாமர்த்தியமாகப் பேசும், செயலாற்றும் வல்லமையைப் பெறலாம்.



त्रैलोक्यमोहन चक्रस्वामिनी, सर्वाशापरिपूरक चक्रस्वामिनी, सर्वसङ्क्षोभण चक्रस्वामिनी, सर्वसौभाग्यदायक चक्रस्वामिनी, सर्वार्थसाधक चक्रस्वामिनी, सर्वरक्षाकर चक्रस्वामिनी, सर्वरोगहर चक्रस्वामिनी, सर्वसिद्धिप्रद चक्रस्वामिनी, सर्वानन्दमय चक्रस्वामिनी, महामहा श्रीचक्रनगरसाम्राज्ञी, नमस्ते नमस्ते नमस्ते नमः
-----


மஹா சுதர்ஸன மஹாமந்திரம் ..

ஓம் க்லீம் க்ருஷ்ணாய ஹ்ரீம் கோவிந்தாய ஸ்ரீம் கோபி
ஜனவல்லபாய ஓம்பராய பரமபுருஷாய பரமாத்மனே!
மமபரகர்ம மந்த்ர தந்த்ர யந்த்ர ஒளஷத அஸ்த்ர
ஸஸ்த்ர வாதப்ரதிவாதானி ஸம்ஹர ஸம்ஹர
ம்ருத்யோர் மோசய மோசய ஓம் மஹா சுதர்சனயா
தீப்த்ரே ஜ்வாலா பரிவ்ருதாய ஸர்வதிக்ஷோபனஹராய
ஹும்பட் பரப்ரஹ்மணே ஸ்வாஹா

ஓம் மஹா சுதர்சன தாராய நம இதம்

"உக்ரம், வீரம், மகாவிஷ்ணும், ஜ்வலந்தம்,
ஸர்வதோமுகம், ந்ருஸிம்மம், பீஷணம், பத்ரம்,
ம்ருத்யும், ருத்யும் நமாம் யஹம்"

...

கருட மாலா மந்திரம் பாராயணம் செய்பவர்கள் எந்த வித துன்பத்திற்கும் ஆளாக மாட்டார்கள்.

ஓம் நமோ பகவதே, கருடாய; காலாக்னி வர்ணாய
ஏஹ்யேஹி கால நல லோல ஜிக்வாய
பாதய பாதய மோஹய மோஹய வித்ராவய வித்ராவய
ப்ரம ப்ரம ப்ரமய ப்ரமய ஹந ஹந
தஹ தஹ பத பத ஹும்பட் ஸ்வாஹா


ஓம் தத்புருஷாய வித்மஹே
சுவர்ண பட்சாய தீமஹி
தந்நோ கருட ப்ரசோதயாத் --கருடன் காயத்திரி


முயற்சித்தால் வெற்றி நிச்சயம். வெற்றி அடைந்தவர்கள் பின்னாலே, அவர்களின் இடையறாத முயற்சி இருக்கவே செய்கிறது. ஆனால், அது எல்லா விஷயத்துக்கும் பொருந்தவே பொருந்தாது. ஒவ்வொருவருக்கும் ஒரு அளவு இருக்கிறது. அதற்கு கூடவும் கூடாது. குறையவும் குறையாது. யாருக்கு எவ்வளவு என்பதை, அவர் பிறந்த நேரமும் பூர்வபுண்ணிய ஸ்தானமும் கூறிவிடுகிறது.

ஒரு எந்திரம் வாங்கினால், அதன் உட்பாகங்களை வரைந்து அதற்கெல்லாம் பெயரிட்டு ஒரு மேனுவல் தருவார்கள். ஓர் ஊர் என்றாலோ, நாடு என்றாலோ அது இப்படித்தான் இருக்கும் என்று ஒரு வரைபடம் உண்டு. அதேபோன்றதுதான் ஒரு மனிதனின் ஜாதகமும், அதற்கு மிஞ்சி எதுவும் இல்லை” என்றார்.

பாவபுண்ணியங்களே, நாம் பிறப்பு எடுக்கவும் நன்மை தீமைகளை அனுபவிக்கவும் காரணம்

பலபேருடைய வாழ்க்கையானது எந்தவிதமான அர்த்தமும் இல்லாமல் ஒரு சாம்பலை போல இருந்த அடையாளமே இல்லாமல் காற்றில் கலந்து மறைந்து விடுகிறது. இதனால் அவர்களின் பிறந்த பலனை அவர்களால் அறியமுடியமலே போய்விடுகிறது. எவனொருவன் தான் எதற்க்காக பிறந்தோம் என்பதை தெள்ள தெளிவாக தெரிந்து கொள்கிறானோ அவனே சாதனையாளனகவும் இருக்கிறான் சரித்திர ஏடுகளில் மறையாமல் நிரந்தரமாக இடம்பிடித்து விடுகிறான்.

உண்மையில் நாம் அனைவருமே சாதிக்க பிறந்தவர்கள் அதற்காக தான் இறைவன் நம்மை படைத்திருக்கிறான். ஆனால் நாம் அதை தெரிந்து கொள்ளாமல் மீண்டும் மீண்டும் பிறந்து இறந்து கொண்டே இருக்கிறோம். நாம் யார்? நாம் பெற வேண்டியது என்ன? நிரந்தரமான நித்தியமான மகிழ்ச்சி என்பது எது என்று இன்றுமுதல் ஆராய துவங்குவோம். சற்று முயற்சி செய்தாலே பல ரகசிய கதவுகளை கடவுள் நமக்காக திறந்து விடுவான். வாருங்கள் அந்த வாசல் வழியாக சென்று நம் வாழ்க்கை தத்துவத்தை புரிந்து கொள்ள முயற்சி செய்வோம்.

...

பில்லி, சூனிய ஏவலில் இருந்து காத்துக் கொள்ள...!

பில்லி, சூனியம், ஏவல் ஆகியவைகளினால் பாதிக்கப்பட்ட அல்லது பாதிக்கப் பட்டதாய் கருதப் படுகிறவர்கள் தங்களை காத்துக் கொள்ளும் முறை ஒன்றினைப் பற்றி பார்ப்போம். இந்த தகவல்கள் கோரக்கர் அருளிய "சந்திரரேகை" எனும் நூலில் இருந்து சேகரிக்கப் பட்டது.

ஓதிடுவேன் பேய்பில்லிச்சூனி யங்கள்
ஓடுவதற்கு மந்திரங்கள் உண்மை யாக
நீதியுடன் ஓம்உம்லம்சிம் நம்வம்கிலீம்
ரீங்சிரீங் ஹிரீங் ஹரிங்கே
தீதின்றி முக்கோணம் பெரிதாய்க் கீறித்
திட்டமுடன் அஉஇ உள்ளே நாட்டிப்
பேதிக்கா வோங்காரம் சுற்றித் தாக்கிப்
பிரபலமாய் செபிக்கச் சூனியங்கள் போமே.

- கோரக்கர்.

இந்த பாடலில் உள்ள குறிப்புகளின் படி வரைந்த யந்திரத்தின் படத்தினை கீழே கொடுத்திருக்கிறேன்.


இந்த யந்திரத்தினை மூன்றங்குல (3"x3") சதுரமான செப்பு அல்லது வெள்ளியால் ஆன தகட்டில் கீறிக் கொள்ளவேண்டும். யந்திரங்களை கீறுவதற்கென தனித்துவமான முறைகள் இருக்கின்றன. அந்த தகவல்களை முந்தைய பதிவுகளில் பார்க்கலாம். அதன் படியே இந்த யந்திரங்கள் கீறப்பட வேண்டும்.

இப்போது வெளிச்சம் நிரம்பிய, தூய்மையான அறையில் கிழக்கு நோக்கி அமர்ந்து, யந்திரத்தை வலதுகையில் ஏந்தியவாறு “ஓம் உம் லம் சிம் நம் வம் கிலீம் ரீங்சிரீங் ஹிரீங் ஹரிங்கே” என்ற மந்திரத்தை அந்தி, சந்தி வேளைகளில் 108 தடவை வீதம் மூன்று நாட்கள் தொடர்ந்து செபித்து வர பில்லி, சூனியம், ஏவல் போன்றவை எது இருந்தாலும் அது அவர்களை விட்டு நீங்கிவிடும் என்கிறார்.

தேவையுள்ளவர்கள் எளிதான செலவு பிடிக்காத இந்த முறையினை பயன்படுத்திக் கொள்ளலாம்.


(இவை அனைத்தும் படித்து திரட்டிய தகவல். வலைப்பதிவர் தகவல்களுக்கு மிக்க நன்றி. படித்ததில் பிடித்ததை பகிர்ந்துகொள்கிறேன்.)

No comments:

Post a Comment