Friday, May 24, 2013

இன்று ஸ்ரீ நரசிம்ஹ ஜெயந்தி

ஸ்ரீ நரசிம்ஹ ஜெயந்தி – மே 24, 2013



ஆந்திர மாநிலத்தில் உள்ள நரசிம்மத் தலங்களில் தனிச் சிறப்பு வாய்ந்தது சிம்மாசலம். இங்குள்ள வராஹ நரசிம்ம சுவாமி ஆலயம் 800 அடி உயரக் குன்றின் மீது அமைந்துள்ளது. 11-ம் நூற்றாண்டைச் சேர்ந்தது. ஆலயத்தின் விமானம் ஒரிய பாணியில் பளபளக்கிறது. பெருமாளின் திவ்யத் தலங்களில் முக்கியச் சிறப்பு வாய்ந்தது. இங்கே பெருமாள் வராஹமூர்த்தியாகவும், நரசிம்மராகவும் இரண்டு அவதார நிலைகளில் எழுந்தருளியிருக்கிறார். அது மட்டுமல்ல; வராஹம், சிம்மம், மனிதன் என மூன்று உருவங்களைக் கொண்டவராக சேவை சாதிக்கிறார்.

லக்ஷ்மீ ந்ருஸிம்ஹ பஞ்சரத்னம் - ஆதிசங்கரர் 

 த்வத்ப்ரபுஜீவப்ரியமிச்சஸி சேந்நரஹரிபூஜாம் குரு ஸததம்
ப்ரதிபிம்பாலங்க்ருத த்ருதி குசலோ பிம்பாலங்க்ருதி மாதநுதே ந
சேதோ ப்ருங்க ப்ரமஸி வ்ருதா பவ மருபூமௌ விரஸாயாம்
பஜ பஜ லக்ஷ்மீ நரஸிம்ஹாநகபத ஸரஸிஜ மகரந்தம் நந


 மனமாகிய வண்டே, உனது எஜமானனாகிய ஜீவனுக்குப் பிரியமானதைச் செய்ய விரும்பினால், ஸ்ரீலக்ஷ்மீநரசிம்மபூஜையை விடாது செய். பிரதிபிம்பத்துக்கு அலங்காரம் செய்வதில் ஈடுபடும் திறமைசாலி, முதலில் நிஜ உருவத் தையே அலங்கரிப்பான். சாரமற்ற சம்சாரமெனும் பாலைவனத்தில் ஏன் வீணாக அலைகிறாய்? சாரமுள்ள செயலைச் செய்; அதாவது, நீ லக்ஷ்மீநரசிம்மரின் மாசற்ற பாதாரவிந்தத் தேனை அடைவதையே என்றும் மேற்கொள்.
 
சுக்தௌ ரஜதப்ரதிபா ஜாதா கடகாத்யர்த்த ஸமர்த்தாசேத்
து:கமயீ தே ஸம்ஸ்ருதிரேஷா நிர்வ்ருதிதாநே நிபுணாஸ்யாத்ந
சேதோப்ருங்க ப்ரமஸி வ்ருதா பவ-மருபூமௌ விரஸாயாம்
பஜ பஜ லக்ஷ்மீ நரஸிம்ஹாநகபத ஸரஸிஜ மகரந்தம் நந

மன வண்டே! முத்துச்சிப்பியைக் கண்டு ஒருவன் வெள்ளி என்கிறான்; அந்த வெள்ளியால் ஆபரணங்கள் செய்ய முடியுமா? அவ்வாறு பயன்பட்டால் இந்த உனது துக்கமயமான சம்சாரமும் பேரானந்தத்தைத் தருவது சாத்தியமாகலாம். ஆகையால் சாரமற்ற சம்சாரப் பாலைவனத்தில் வீணே அலையாமல் ஸ்ரீலக்ஷ்மீ நரசிம்மரின் குறைவற்ற திருவடித் தாமரைகளின் மகரந்தத்தையே பற்று.
 
ஆக்ருதி ஸாம்யாச்சால்மலிகுஸுமே ஸ்தலநளிநத்வ ப்ரமமகரோ:
கந்தரஸாவிஹ கிமு வித்யேதே விபலம் ப்ராம்யஸி ப்ருசவிரஸே(அ)ஸ்மின் ந
சேதோப்ருங்க ப்ரமஸி வ்ருதா பவமருபூமௌ விரஸாயாம்
பஜ பஜ லக்ஷ்மீநரஸீம்ஹாநகபத ஸரஸிஜ மகரந்தம் நந

மனமான வண்டே! உருவத்தின் ஒப்புமையால், இலவம்பஞ்சு மரத்தின் பூவைப் பார்த்து, தரையிலும் தாமரை மலர்கிறதே என்ற கலங்குகிறாயே! இந்தப் பூவில் வாசனையோ, சிறிதாவது தேனோ உள்ளதா? பயனற்ற,  சிறிதும் சாரமற்ற இல்லறத்தில் அலைகிறாயே! ஏன் சம்சாரப் பாலைவனத்தில் உழல்கிறாய்? ஸ்ரீலக்ஷ்மீநரசிம்மரின் சரணாரவிந்தங்களின் தேன்துளிகளையே பெறுவதில் ஆசை கொள்.
 
ஸ்ரக்சந்தந வநிதாதீந் விஷயாந் ஸுகதாந் மத்வா தத்ர விஹரஸே
கந்தபலீஸத்ருசா நநு தே(அ)மீ போகாநந்தர து:க க்ருதஸ் ஸ்யு: ந
சேதோப்ருங்க ப்ரமஸி வ்ருதா பவமருபூமௌ விரஸாயாம்
பஜ பஜ லக்ஷ்மீநரஸீம்ஹாநகபத ஸரஸிஜ மகரந்தம் நந

மனம் எனும் வண்டே! பூமாலை, சந்தனக் குழம்பு, வனிதையர் முதலானவற்றை இன்பம் தருவனவாகக் கருதி அவற்றில் ஈடுபடுகிறாயே, அவை தாழம்பூவிற்குச் சமம்; முதலில் இவை இன்பம் தருவதுபோல் தோன்றினாலும், பிறகு முழுவதும் துன்பம் விளைவிக்கும்.  கையால் மனமே! விரசமான சம்சார பாலையில் வீணே உழலாதே; ஸ்ரீலக்ஷ்மீநரசிம்மரின் திருவடித்தாமரைகளின் மகரந்தத்தையே முக்கியமாகப் பற்று.
 
தவ ஹிதமேகம் வசநம் வக்ஷ்யே ச்ருணு ஸுககாமோ யதி ஸததம்
ஸ்வப்நே த்ருஷ்டம் ஸகலம் ஹி ம்ருஷா ஜாக்ரதி ச ஸ்மர தத்வதிதி! ந
சேதோப்ருங்க ப்ரமஸி வ்ருதா பவமருபூமௌ விரஸாயாம்
பஜ பஜ லக்ஷ்மீநரஸிம்ஹாநகபத ஸரஸிஜ மகரந்தம்நந

மனமாகிய வண்டே! உனக்கு இதமான ஒன்றைக் கூறுகிறேன். நீ எப்போதும் இன்பம் அடைய விரும்பி னால், நீ விழிப்பு நிலையில் பார்க்கும் எல்லாப் பொருளுமே, கனவில் காணும் பொருளைப் போலவே முழுவதும் பொய் என்பதை நன்கு ணர். மனமே, வீணாக விரசமான சம்சாரப் பாலைவனத்தில் அலைந்து திரியாதே; ஸ்ரீலக்ஷ்மீ நரசிம்மருடைய மாசற்ற சரணாரவிந்தத் தேனிலேயே பற்று வை.




ஸ்ரீ நரசிம்ஹ ப்ரபத்தி



The shlokam below is Narasimha Prapatti by His Holiness The Jeer. This can be chanted by anyone at any time and submits us to the infinite Mercy of Narasimhar.

NARASIMHA PRAPATTI:
 
MATA NARASIMHA, PITA NARASIMHA
BRATHA NARASIMHA, SAKHA NARASIMHA
VIDYAA NARASIMHA, DRAVINAM NARASIMHA
SWAMI NARASIMHA, SAKALAM NARASIMHA
ITHO NARASIMHA, PARATHO NARASIMHA
YATHO YATHO YAHIHI, TATHO NARASIMHA
NARASIMHA DEVAATH PARO NA KASCHIT
TASMAAN NARASIMHA SHARANAM PRAPADYE

மாதா நரசிம்ஹா, பிதா நரசிம்ஹா
ப்(4)ராதா நரசிம்ஹா ஸகா நரசிம்ஹா
வித்(3)யா நரசிம்ஹா, த்(3)ரவிணம் நரசிம்ஹா
ஸ்வாமி நரசிம்ஹா ஸகலம் நரசிம்ஹா
இதோ நரசிம்ஹா பரதோ நரசிம்ஹா,
யதோ யதோ யாஹி: ததோ நரசிம்ஹா,
நரசிம்ஹா தே(3)வாத் பரோ ந கஸ்சித்
தஸ்மான் நரசிம்ஹா சரணம் ப்ரபத்(3)யே

Meaning: 
Mother and father is Narasimha
Brother and friend is Narasimha
Knowledge and wealth is Narasimha
My Lord and my Everything is Narasimha.
Narasimha in this world, Narasimha in the other
Wherever I go, there is Narasimha
Narasimha is the only Lord,there is none other
So, I seek refuge in you, Narasimha   

சகலவிதமான பயங்களைப் போக்கும் ஸ்ரீந்ருஸிம்ஹ மந்திரம்

உக்ரம் வீரம் மஹாவிஷ்ணும்
ஜ்வலந்தம் ஸர்வதோமுகம்
ந்ருஸிம்ஹம் பீஷணம் தம் பத்ரம்
ம்ருத்யும் ம்ருத்யும் நமாம்யஹம்



இதில் காணப்படுபவை யாவும் அடியவனால் எழுதப்பட்டது என்றோ, என் அனுபவங்கள் என்றோ என் கருத்துக்கள் என்றோ எண்ணி விட வேண்டாம்
இவை அனைத்தும் வலைத்தளம் / வலைப்பூ பதிவுகள் படித்து திரட்டிய தகவல். வலைப்பதிவர் தகவல்களுக்கு மிக்க நன்றி. படித்ததில் பிடித்ததை பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

No comments:

Post a Comment