Tuesday, April 29, 2025

ஷேத்ர யாத்திரை .. திருவிசநல்லூர்

 ஷேத்ர யாத்திரை .. கும்பகோணம் 2024 (6)
1-9-2024 .. ஞாயிறு
திருமங்கலக்குடிலிருந்து 6 கிமீதொலைவில் உள்ள 
திருவிசநல்லூர் யோகநந்தீசுவரர் திருக்கோயில் .. 
10 நிமிஷ டிரைவ் 
அருள்மிகு அன்னை சவுந்தர நாயகி உடனுறை 
அருள்மிகு அய்யன் சிவயோகிநாத சுவாமி தரிசனம்.. 
நந்தியுடன் தொடர்புடைய ரிசப ராசி ஸ்தலம் …

பொதுவாக எல்லா சிவத்தலங்களிலும் உள்ளே 
நுழைந்தவுடன் கொடிமரம் முதலில் இருக்கும்பின்னர்
பலிபீடம்நந்தி என்று இருக்கும்.ஆனால் இத்தலத்தில்
நந்தி முதலில் இருக்கும்ஒரு கால்எடுத்து எழுந்த 
பாவனையிலும் திரும்பி வாசலைப்பார்த்த நிலையிலும்
இருக்கும்

ஒரு சமயம் பெரும் பாவங்கள் செய்த ஒருவன்தன் 
விதிப்படி மரணிக்கவேண்டிய தினத்தன்று இக்கோவில்
வாசலில் நின்று இறைவனை அழைத்தான்.அப்போது 
சிவபெருமான் நந்திதேவரிடம்வாசலில் நிற்பது யார் 
என்று கேட்டார்நந்திதேவர் வாசலை நோக்கி திரும்பி
வந்தவனை பார்த்தார்அன்று பிரதோஷ தினமாக 
இருந்ததாலும், நந்திதேவர் பார்வைபட்டதாலும் 
உடனே அவன் பாவங்கள் தொலைந்தன.  அதே சமயம்
விதிப்படி அந்த மனிதனின் உயிரை பறிக்க எமன் 
வந்தான்.  நந்திதேவர் எமனை கொடிமரத்திற்கு 
வெளியே தடுத்து நிறுத்தி சண்டையிட்டு 
வெளியேற்றினார்இதனால்தான் நந்திதேவர் 
இக்கோவிலில் வேறு எந்ததலத்திலும் காணமுடியாத,
மாறுபட்ட நிலையில்அமைந்திருக்கிறார்.
இங்கு நந்தி ரிஷபவாகனமாக காத்து நிற்பதால்ரிஷப
ராசிக்காரரர்களின் பரிகார தலமாக விளங்குகிறது
இவரை பிரதோஷம் சிவராத்திரி சோமவார நாட்களில்
வழிபடுவது சிறப்பு.

மரண பயம் விலகும் .... 
சிவனடியாரின் உயிரைப் பறிக்க வந்த தன் செயலுக்கு
மன்னிப்பு கேட்டு எமதர்மனே சிவயோகிநாதரையும்
நந்திதேவரையும் வணங்கினான் என்பது புராணம்
எனவே இறைவனை வணங்கினால் மரணபயம் விலகும்

குரு தோஷம் நீங்கும்குருவின் அருள் கிடைக்கும்.
இறைவன் ஏழு முனிவர்களுக்கு அடைக்கலம் 
கொடுத்ததால் அவருடைய லிங்கத் திருமேனியில் ஏழு
சடைகள் இருக்கின்றனஇந்த இறைவனை வழிபட
குரு தோஷம் நீங்கும்குருவின் அருள்கிடைக்கும்.

பெண் பாவம் சம்பந்தப்பட்ட பழிகளை போக்கும் 
ஸ்தலம் …
கேரள நாட்டைச் சேர்ந்த அரசன் ஒருவன்பல 
பெண்களுடன் நட்பு கொண்டு பெரும் தவறிழைத்து
வந்தான்ஏராளமான பெண்களை ஏமாற்றியும் 
வஞ்சித்தும் ஈன வாழ்க்கை வாழ்ந்துவந்தான்ஒரு
கட்டத்தில் பாவ வாழ்க்கையில் இருந்து மீள வழி 
தேடிய இந்த அரசனுக்குதிருவிசநல்லூரின் 
பெருமைகள் பற்றி ஒரு மகான் கூறினார்அதன்படி 
இங்குவந்த அரசன் காவிரியில் நீராடிஇந்தத்தலத்தில்
உறையும் இறைவனை தரிசித்து பெண் பாவங்கள் 
நீங்கப்பெற்றான் என்று தல வரலாறு கூறுகிறது
தெரிந்தோதெரியாமலோ பெண்களின் பாவத்திற்கும்
பழிக்கும் ஆளாகி இருப்பவர்கள் இந்த ஆலயம் வந்து 
வழிபட்டால் நலம் பெறலாம்.

மகான் ஸ்ரீதர வெங்கடேச அய்யாவாள் அவதரித்த 
ஸ்தலம் …
மகான் ஸ்ரீதரஐயாவாள் அவதரித்து பல அற்புதங்களை
நிகழ்த்திய தலம் திருவிசநல்லூர்தன் இல்லத்து 
சிராத்த தினத்தன்று உணவளிப்பதற்காக 
அந்தணர்களை எதிர்பார்த்து ஸ்ரீதர ஐயாவாள் தன் 
வீட்டு வாசலில் காத்திருக்கிறார்அப்போது 
தாழ்த்தப்பட்டவர் ஒருவர் அவர் இல்லம் வந்து
பசியால் துடிப்பதாக சொன்னார்.உடனே அந்தணர்கள்
உண்பதற்காக தயாராக வைத்திருந்த உணவை அந்த
தாழ்த்தப்பட்டவருக்கு அளித்து மகிழ்ந்தார்இதனைக்
கண்டு வெகுண்டனர் அந்த அக்கிரஹாரத்தில் வசித்த
அந்தணர்கள், “நீ தூய்மையானவன் என்பதை 
எங்களுக்கு நிரூபித்தால்தான் இங்கே இருக்க 
வேண்டும்.  இல்லாவிட்டால்கிராமத்தை விட்டு 
வெளியேற வேண்டும்நீ தூய்மையானவன் என்பதை 
நிரூபிக்க விரும்பினால் உடனே கங்கை நதியை 
இங்கே வரவழைத்து அதில் நீ நீராட வேண்டும்
இதுதான் பரிகாரம்” என்று கட்டளை இட்டனர்
'ஆண்டவனுக்கு முன்அனைவரும் சமம்என்பதே 
ஐயாவாளின் கொள்கைபக்தியில் சிறந்த ஸ்ரீதர 
ஐயாவாள் இறைவனை உருகி வேண்டஅவர் வீட்டுக்
கிணற்றில் கங்கை கொப்பளித்து வந்ததுகிணற்றின்
நீர்மட்டம் விறுவிறுவென ஏறிவழிந்துஅந்தத் தெரு 
முழுதும் கங்கை நீர் பெருக்கெடுத்து ஓடியது
அப்பொழுது தான் அந்த தெருவில் வாழ்ந்த 
அந்தணர்கள் ஐயாவாளின் மகிமையை அறிந்தனர்
மன்னிப்பும் கேட்டனர்
இப்பொழுதும் கார்த்திகை அமாவசை தினத்தில் 
ஐயாவாள் வசித்த வீட்டின் கிணற்றில் கங்கை
எழுந்தருளுகிறாள்ஏராளமான பக்தர்கள் அன்றைய 
தினம் அங்கு சென்று நீராடி புண்ணியம்பெறுகின்றனர்.

சிவன் க்ருத யுகத்தில் புராதனேஸ்வரராகவும்த்ரேத 
யுகத்தில் யோகநந்தீஸ்வரராகவும்துவாபரயுகத்தில் 
வில்வாரண்யேஸ்வரராகவும்கலியுகத்தில் 
சிவயோகநாதராகவும் வழிபடப்படுகிறார்,
அகத்தியரும் லோபாமுத்திரையும்சப்தரிஷிகளும், 
பதினெண் சித்தர்களும் நித்தம் வணங்கும்ஸ்தலம்.
சதுர் கால பைரவர் ஸ்தலம்.
திருவிசநல்லூர்லிருந்து கும்பகோணம் ராயாஸ் 
ரிட்டர்ன் .. 12 கிமீ, 30 நிமிஷ டிரைவ்  .. சாயங்காலம்
நாலரை ஆயிடுத்து .. பிரேக்பாஸ்ட் லஞ்ச் அங்கங்க 
சாப்டாச்சுகும்பகோணம்அதனால தரமான ருசியான
உணவு .. ரெண்டுமணி நேரம் நன்னா தூங்கியாச்சு .. 
ஏழரை மணிக்கு மகாமகம் குளத்துக்கிட்ட ஒரு 
கையேந்தி பவன்ல சூடா இட்லி சட்னி சாம்பார் 
நின்னுண்டே சாப்பிட்டு, சுக்கு காபி குடிச்சுட்டு 
ராயாஸ்க்கு திரும்பியாச்சு .. 
ஒன்பது மணிக்கு படுக்கையை போட்டாச்சு 

வலைத்தளம்/வலைப்பூ/முகநூல் பதிவுகள் படித்து
அறிந்த விஷயங்களை நான் அறிந்தவைகளோடு
அங்கொன்றும்இங்கொன்றுமாக சேர்த்து இங்கு
ஒழுங்குபடுத்தி ஏற்றியுள்ளேன். பதிவர்களுக்கு
மிக்க நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
படங்கள் உதவி: வலைப்பூ பதிவுகள்


ஷேத்ர யாத்திரை .. திருமங்கலக்குடி

 ஷேத்ர யாத்திரை .. கும்பகோணம் 2024 (5)

1-9-2024 .. ஞாயிறு

தேப்பெருமாநல்லூரிலிருந்து 10 கிமீ தொலைவில் உள்ள

திருமங்கலக்குடி திருக்கோயில்.. 20 நிமிஷ டிரைவ் 

அருள்மிகு அன்னை மங்களாம்பிகை உடனுறை அருள்மிகு அய்யன்

பிராணநாதேஸ்வரர் தரிசனம் .. பிராணன்தந்த பிராணவரதேஸ்வரர்

மாங்கல்யம் தந்த மங்களாம்பிகை .. 

மாங்கல்ய தோஷங்கள் நீக்கும் திருத்தலம்பஞ்சமங்கள ஷேத்திரம்

தலத்தின் பெயர் மங்களக்குடிதல விநாயகர் மங்கள விநாயகர்

அம்பாள் மங்களாம்பிகைதீர்த்தம் மங்கள தீர்த்தம்

விமானம் மங்கள விமானம்.


சிவன் சுயம்பு மூர்த்தியாக உள்ளார்வழக்கமாக லிங்கத்தின் பாணம்

ஆவுடையார் (பீடம்உயரத்தைவிட சிறியதாக இருக்கும்ஆனால் 

இக்கோயிலில் சிவலிங்கத்தின் பாணம் ஆவுடையாரை விட

உயரமாக அமைந்துள்ளது தனிச்சிறப்புஅகத்தியர் இத்தலத்திற்கு 

வந்தபோது அவருக்கு சுவாமி உயர்ந்தவராக காட்சி தந்தாராம்

இதன் அடிப்படையில் பாணம் மட்டும் பெரிதாக இருக்கின்றது

அகத்தியர் சுவாமியின் பாணத்தின் மீது தன் கையை உயர்த்தித்தான்

மலர் வைத்து பூஜித்தார்.

அன்னை மங்களாம்பிகை தனிச் சன்னிதியில் தெற்கு நோக்கி வலது

கையில் தாலிக்கொடியுடன்காட்சி தருகிறாள்.  அம்பாளை வழிபடும்

பெண்களுக்கு தாலிக்கயிறு பிரசாதமாகக் கொடுக்கப்படுகிறது

இதை வாங்கிக்கொள்ளும் திருமணமாகாத பெண்களுக்கு விரைவில்

திருமணம் நடைபெறும்திருமணம் நடைபெற்ற பெண்கள்தீர்க்க 

சுமங்கலியாக வாழ்வார்கள்என்பது ஐதீகம்

ஜாதகங்களில் சொல்லப்படும் தோஷங்களில் கடுமையானது 

மாங்கல்ய தோஷம்அந்ததோஷத்தைப் போக்கி வளமான வாழ்வை 

அளிப்பவர் இந்த மங்களாம்பிகை.


முதலாம் குலோத்துங்க சோழனின் அமைச்சர் அலைவாணர்

அரசனுக்குத் தெரியாமல் தான்கண்டெடுத்த சுயம்புலிங்கத்திற்குக் 

கோயில் கட்டினார்செய்தியறிந்து வெகுண்ட அரசன் அமைச்சரைச்

சிரச்சேதம் செய்ய உத்தரவிட்டான்அலைவாணர் தனது 

மரணத்துக்குப் பின் தனதுஉடலை திருமங்கலங்குடிக்கு எடுத்துச் 

செல்லும்படி கேட்டுக்கொண்டிருந்ததால் அவரது ஆட்கள்

அவ்வண்ணமே எடுத்துச் சென்றனர்அமைச்சரின் மனைவி

மங்களாம்பிகையிடம் சென்று தன் கணவனை உயிரோடு திருப்பித்

தர வேண்டுமென மன்றாடி வேண்டினாள்அம்மன் அருளால்

திருமங்கலங்குடிக்குள் அமைச்சரது உடல் எடுத்துவரப்பட்டதும் 

அவர் உயிர் பெற்று எழுந்தார்இந்நிகழ்வின் காரணமாகவே 

கோவிலின் சுவாமி பிராணநாதேசுவரர் என்றும் அம்மன் மாங்கல்ய

பாக்கியமளித்ததால் மங்களாம்பிகை எனவும் பெயர் கொண்டுள்ளனர்

என்பது தொன் நம்பிக்கை.


மற்றொரு புராணத்தின் படிநவக்கிரகங்களுக்கு விதியை மாற்றும் 

அதிகாரம் இல்லாததால்காலமாமுனிவருக்கு உண்டாகவிருந்த 

தொழுநோயை நவக்கிரகங்கள் தடுத்து நீக்கியதற்காக அந்நோய் 

கிரகங்களுக்கு பிடிக்கும்படி பிரம்மா சாபம் கொடுத்தார்பிரம்மா

அவர்களை திருமங்கலக்குடிக்குச் சென்று கோள் வினை தீர்த்த 

விநாயகர் (கிரகங்களின் பாவங்களைப்போக்கிய விநாயகர்

பிரார்த்தனை செய்து அவர்களின் பாவங்களிலிருந்து விடுபடச் 

சொன்னார்.  இத்தலத்தில் நவக்கிரகத்திற்கு சன்னதி கிடையாது.

நவக்கிரகங்களின் தோஷத்தை நீக்கியருளிய பெருமான் 

திருமங்கலக்குடியில் எழுந்தருளியுள்ள பிராணநாதேசுவரர்

ஆகவே திருமங்கலக்குடியில் பிராணநாதேசுவரரையும் 

விநாயகரையும் வழிபட்ட பிறகுதான்சூரியனார் கோவிலுக்குச் 

சென்று வழிபட வேண்டும் என்பது ஐதீகம்

இத்தலம் ஒரு சிறந்த குஷ்டரோக நிவர்த்தித் தலம் ஆகும்

நவக்கிரகங்கள் தங்களின் சாபம் நீங்கவெள்ளெருக்கு இலையில்

தயிர்சாதம் படைத்து இறைவனை வழிபட்டதால் இந்தக் கோவிலில்

ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் உச்சிகால பூஜையின் போது

உப்பில்லாத தயிர் சாதம் சுவாமிக்கு நைவேத்தியமாக 

படைக்கப்படுகிறதுபித்ருதோஷம் உள்ளவர்கள்முன்னோர்களுக்கு

முறையாக தர்ப்பணம் செய்யாதவர்கள்இத்தலஇறைவனுக்கு தயிர்

சாதம் நைவேத்தியமாக படைத்து வழிபடலாம்


உள்சுற்றில் 11 சிவலிங்கத் திருமேனிகள் வரிசையாகவுள்ளன

வலைத்தளம்/வலைப்பூ/முகநூல் பதிவுகள் படித்து அறிந்த 

விஷயங்களை நான் அறிந்தவைகளோடுஅங்கொன்றும்

இங்கொன்றுமாக சேர்த்து இங்கு ஒழுங்குபடுத்தி ஏற்றியுள்ளேன். 

பதிவர்களுக்குமிக்க நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

படங்கள் உதவி: வலைப்பூ பதிவுகள்