Monday, December 30, 2013

சிவனின் ஐந்து முகங்கள்

ஓம் சத்யோஜாதய நமஹ
ஓம் வாமதேவாய நமஹ
ஓம் தத்புருஷாய நமஹ
ஓம் அகோராய நமஹ 
ஓம் ஈசானாய நமஹ

சத்யோஜாதம்:
பிரம்ம தேவன் சிவபெருமானை மேற்கு திசையினை நோக்கி சிவபெருமானை குறித்து தவம் செய்த போது இறைவன் அழகிய வடிவத்துடன், வெண்மை நிறமான இளையோனாய் பிரம்மன் முன்பு தோன்றினார்.  இந்த முகமே சத்யோஜாதம் எனப்படும்.
சத்யோஜாத முகத்திலிருந்து தோன்றிய முகங்கள்:
லிங்கோத்பவர்
சுகாசனர்
உமாமகேசர்
அரிஹரர்
அர்த்தநாரி

வாமதேவம்:
மீண்டும் பிரம்ம தேவன் வடக்கு திசையினை நோக்கி சிவபெருமானை குறித்து தவம் செய்த போது இறைவன் சிவந்த நிறத்துடன் பாம்பை அணிந்தும், மானும் மழுவும் கைகளில் ஏந்தி பிரம்ம தேவனுக்கு காட்சி கொடுத்தார்.  இறைவனின் இந்த முகமே வாமதேவம் எனப்படும்.
வாமதேவ முகத்திலிருந்து தோன்றிய 5 முகங்கள்:
கங்காதரர்
சக்ரவரதர்
கஜாந்திகர்
சண்டேசானுக்கிரகர்
ஏகபாதர்

தத்புருஷம்:
அதன் பிறகு பிரம்ம தேவன் கிழக்கு திசையினை நோக்கி சிவபெருமானை குறித்து தவம் செய்தார்.  இறைவன் தங்க நிறத்துடன் பிறையை சென்னியில் சூடி காட்சி கொடுத்தார்.  இறைவனின் இந்த முகமே தத்புருஷம் எனப்படும்.  பிரம்மனின் தவத்தால் மகிழ்ந்த இறைவன் உளம் மகிழ்ந்து தனது அழகிய உருவத்திலிருந்து காயத்ரீ தேவியை உண்டாக்கி பிரம்ம தேவனிடம் அளித்தார்.  காயத்ரீயை வணங்கி வருபவர்களுக்கு நரகம் கிடையாது எனவும் வரமளித்தார்.
தத்புருஷ முகத்திலிருந்து தோன்றிய வடிவங்கள்:
பிட்சாடனர்
காமாரி
காலாரி
சலந்தராரி
திரிபுராரி
 
அகோரம்:
பிறகு பிரம்மா தெற்கு திசையினை நோக்கி சிவபெருமானை குறித்து தவம் செய்தார்.  இறைவன் முக்கண் கொண்டவராய் நெருப்பினையும், வாளினையும் கரத்தில் கொண்டவராய் கரிய நிறத்துடன் தோன்றினார்.  இறைவனின் இந்த முகத்திற்கு அகோரம் என்று பெயர்.
அகோர முகத்திலிருந்து தோன்றிய வடிவங்கள்:
கஜசம்ஹாரர்
வீரபத்திரர்
தக்ஷிணாமூர்த்தி
கிராதமூர்த்தி
நீலகண்டர்

ஈசானன்:
கடைசியாக பிரம்ம தேவன் ஆகாயத்தினை நோக்கி சிவபெருமானை குறித்து தவம் செய்தார்.  இறைவன் சாம்பல் வண்ணத்துடன் முக்கண் கொண்டவராயும், இளமதியை சென்னியில் சூடியவாறும், கோரைப்பற்கள் கொண்ட உருமாய் இரண்டு பெண்களுடன் தோன்றினார்.  இறைவனின் இந்த முகமே ஈசானம் எனப்படும்.  அதில் ஒரு பெண் மாயன் முதல் தேவர்கள் வரை அனைவரையும் ஈன்ற அன்னை ஆவாள்.  மற்றொரு பெண் வெண் தாமரையில் வீற்றிருக்கும் கலைமகள் ஆவாள்.
ஈசான முகத்திலிருந்து தோன்றிய வடிவங்கள்:
சோமாஸ்கந்தர்
நடராசர்
ரிஷபாரூடர் 
கல்யாணசுந்தரர்
சந்திரசேகரர்
 
இந்த ஐந்து முகங்களையும் நினைத்து தியானம் செய்தாலும் அல்லது வழிபாடு செய்தாலும் இப்பிறவியில் சகல சுகங்களும் கிட்டி மறுபிறவியில் முக்தியும் கிட்டும் என்பது பிரம்ம தேவனின் வாக்கு ஆகும்.

.....  'ஆன்மீகச்சுடரின் ஒளிக்கீற்றுக்கள்'

Sunday, December 29, 2013

சிவ லிங்கங்கள்

சிவ வழிபாட்டிற்குரிய லிங்கங்கள் மூன்று வகைப்படும்.
ஷணிக லிங்கம் ... இஷ்ட லிங்கம் ... ஆத்ம லிங்கம்
 
ஷணிக லிங்கம்:

நாள்தோறும் சிவ வழிபாடு நடத்தி பின்பு கைவிடப்படும் லிங்கம் ஷணிக லிங்கம் எனப்படும். இதை செய்வது மிகவும் எளிதானது. இது 16 வகைப்படும். இதனை நாமே செய்யலாம். குருவிடமிருந்து லிங்கத்தை பெற இயலாதவர்கள் இதை செய்து வழிபடலாம்.

1. புற்றுமண் லிங்கம் ..... மோட்சம் தரும்
2. ஆற்றுமண் லிங்கம் ..... பூமிலாபம் தரும்
3. பச்சரிசி லிங்கம் ..... பொன், பொருள் தரும்
4. அன்ன லிங்கம் ..... அன்ன விருத்தி தரும்
5. பசுவின் சாண லிங்கம் ..... நோய்கள் தீரும்
6.வெண்ணெய் லிங்கம் ..... மன மகிழ்ச்சி தரும்
7. ருத்ராட்ச லிங்கம் ..... அகண்ட அறிவைத் தரும்
8. விபூதி லிங்கம் ..... அனைத்து செல்வமும் தரும்
9. சந்தன லிங்கம் ..... அனைத்து இன்பமும் தரும்
10. மலர் லிங்கம் ..... ஆயுளை அதிகமாக்கும்
11. தர்ப்பைப்புல் லிங்கம் ..... பிறவியிலா நிலை தரும்
12. சர்க்கரை லிங்கம் ..... விரும்பிய இன்பம் தரும்
13. மாவு லிங்கம் ..... உடல் வன்மை தரும்
14. பழ லிங்கம் ..... சுகத்தைத் தரும்
15. தயிர் லிங்கம் ..... நல்ல குணத்தைத் தரும்
16. தண்ணீர் லிங்கம் ..... எல்லா மேன்மைகளும் தரும்

 
இஷ்ட லிங்கம்:

மரகதம், படிகம், கருங்கல் இவற்றினால் செய்யப்பட்ட லிங்கத்தை குருவிடமிருந்து முறையாக பெற்று தன் ஆயுள் உள்ள வரைக்கும் தன்னிடமே வைத்துக்கொண்டு தினமும் தாம் செல்லுமிடமெல்லாம் கூடவே எடுத்து சென்று வழிபடும் லிங்கம் இஷ்ட லிங்கம் எனப்படும்.

1. இந்திரன் ..... பத்மராக லிங்கம்
2. குபேரன் ..... ஸ்வர்ண லிங்கம்
3. யமன் ..... கோமேதக லிங்கம்
4. வருணன் ..... நீல லிங்கம்
5. விஷ்ணு ..... இந்திர நீல லிங்கம்
6. பிரம்மன் ..... ஸ்வர்ண லிங்கம்
7. அஷ்ட வசுக்கள், வசுதேவர்கள் ..... வெள்ளி லிங்கம்
8. வாயு ..... பித்தளை லிங்கம்
9. அசுவினி தேவர்கள் ..... மண் லிங்கம்
10. மகா லட்சுமி ..... ஸ்படிக லிங்கம்
11. சோம ராஜன் ..... முத்து லிங்கம்
12. சாதுர்யர்கள் ..... வஜ்ஜிர லிங்கம்
13. பிராம்மணர்கள் ..... மண் லிங்கம்
14. மயன் ..... சந்தன லிங்கம்
15. அனந்தன் முதலான நாகராஜர்கள் .... பவள லிங்கம்
16. தைத்தியர்கள், அரக்கர்கள் ..... பசுஞ்சாண லிங்கம்
17. பைசாசங்கள் ..... இரும்பு லிங்கம்
18. பார்வதி .... வெண்ணெய் லிங்கம்
19. நிருதி ..... தேவதாரு மர லிங்கம்
20. யோகிகள் ..... விபூதி லிங்கம்
21. சாயா தேவி ..... மாவு லிங்கம்
22. சரஸ்வதி ..... ரத்தின லிங்கம்
23. யட்சர்கள் ..... தயிர் லிங்கம்

 
ஆத்ம லிங்கம்:

தூய மனத்துடன் மனப்பூர்வமாக வழிபட சிவபெருமான் கொண்ட திருவுருவம் ஆத்மலிங்கம் ஆகும். இவ்வகை லிங்கத்திற்கு மனப்பூர்வமான வழிபாடே போதுமானது. வெளிபுற வழிபாடு தேவையில்லை. மனப்பூர்வமாக செய்யப்படும் சிவ லிங்க வழிபாடு ஆத்ம லிங்க வழிபாடு எனப்படும்.

1. மண் ..... காஞ்சிபுரம் ..... ஏகாம்பர லிங்கம்
2. நீர் ..... திருவானைக்கா ...... ஜம்பு லிங்கம்
3. நெருப்பு ..... திருவண்ணாமலை ..... அருணாசல லிங்கம்
4. வாயு ..... திருகாளத்தி ..... திருமூல லிங்கம்
5. ஆகாயம் ..... சிதம்பரம் ..... நடராச லிங்கம்

..... ஆன்மீகச்சுடரின் ஒளிக்கீற்றுக்கள் by SenthilKumar

Saturday, December 28, 2013

51 விநாயகர் வடிவங்களும் பலன்களும்

51 விநாயகர் வடிவங்களும்  
அந்த வடிவங்களை வணங்குவதால் நாம்அடையும் பலன்களும் 

1. ஏகாக்ஷர கணபதி: பரிபூரண சித்தி.
2.
மகா.கணபதி: கணபதி அருள் கிடைக்கும்
3.
த்ரைலோக்ய. மோஹன கர கணபதி: ஸர்வ ரக்ஷாப்ரதம்.
4.
லக்ஷ்மி கணபதி: தன அபிவிருத்தி
5.
ருணஹரள கணபதி: கடன் நிவர்த்தி.
6.
மகா வித்யா கணபதி: தேவ அனுக்ரகம்.
7.
ஹரித்ரா கணபதி: உலக வசியம்.
8.
வக்ரதுண்ட கணபதி: அதிர்ஷ்ட லாபம்.
9.
நிதி கணபதி: நிதி ப்ராப்தி.
10.
புஷ்ப கணபதி: தானிய விருத்தி.
11.
பால கணபதி: மகிழ்ச்சி, மன நிறைவு.
12.
சக்தி கணபதி: சர்வ காரியசித்தி.
13.
சர்வ சக்தி கணபதி: சர்வ ரக்ஷாப்ரதம்.
14.
க்ஷிப்ர ப்ரஸாத கணபதி: துரித பலன்.
15.
குக்ஷி கணபதி: ரோக நிவர்த்தி.
16.
ஸ்ரீ சந்தான லட்சுமி கணபதி: மக்கட்செல்வம்.
17.
ஸ்ரீ ஸ்வர்ண கணபதி: ஸ்வர்ண பிராப்தி.
18.
ஹேரம்ப கணபதி: மனச்சாந்தி.
19.
விஜய கணபதி: வெற்றி.
20.
அர்க கணபதி: தோஷ நிவர்த்தி.
21.
ச்லேதார்க்க கணபதி: மாலா மந்திரம்.
22.
உச்சிஷ்ட கணபதி: திரிகால தரிசனம்.
23.
போக கணபதி: சகலலோக ப்ராப்தி.
24.
விரிவிரி கணபதி: விசால புத்தி.
25.
வீரகணபதி- தைரியம்.

26.
சங்கடஹர கணபதி: சங்கட நிவர்த்தி.
27.
கணேசாங்க நிவாரணி: லட்சுமி மந்திர சித்தி.
28.
விக்னராஜ கணபதி: ராஜயோகம்.
29.
குமார கணபதி: மாலா மந்திரம்.
30.
ராஜ கணபதி: மாலா மந்திரம்.
31.
ப்ரயோக கணபதி: மாலா மந்திரம்.
32.
தருண கணபதி: தியானயோக ப்ராப்தி.
33.
துர்கா கணபதி: துக்க நிவாரணம்.
34.
யோக கணபதி: தியானம்.
35.
நிருத்த கணபதி: கலா பிவிருத்தி.
36.
ஆபத்சகாய கணபதி: ஆபத்துகள் நீங்குதல்.
37.
புத்தி கணபதி: வித்யா ப்ராப்தி.
38.
நவநீத கணபதி: மனோவசியம்.
39.
மோதக கணபதி: சம்பூர்ண பலன்.
40.
மேதா கணபதி: மேதா பிவிருத்தி.
41.
மோஹன கணபதி: ரக்ஷாப்ரதம்.
42.
குரு கணபதி: குருவருள்.
43.
வாமன கணபதி: விஷ்ணு பக்தி.
44.
சிவாவதார கணபதி: சிவபக்தி.
45.
துர்வாக கணபதி: தாப நிவர்த்தி.
46.
ரக்த கணபதி: வசிய விருத்தி.
47.
அபிஷ்டவாத கணபதி: நினைத்ததை அடைதல்.
48.
ப்ரம்மண கணபதி: ப்ரம்ம ஞானம்.
50.
மகா கணபதி: ப்ரணவமூலம்.
51.
வித்யா கணபதி: ஸ்ரீ வித்தை